மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால்
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்குகெடுப்பு ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. தபால் மூல வாக்கெடுப்புக்கள் இன்றும் நாளையும் இடம்பெறுமெனவும் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் 934 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் உள்ளுர் மற்றும் வெளியூர் பிரமுகர்கள் ஈடுபடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சித் தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தல் கடமைகளில் 4300 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு 113 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நோக்கில் பத்து வருடங்களுக்கு பின்னர் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.