Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
Vediyal.com
Vediyal.com
Publicité
Archives
22 février 2008

பூநகரிப் பகுதியில் சிறிலங்காவின் வான் தாக்குதலில்

பூநகரிப் பகுதியில் சிறிலங்காவின் வான் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


பூநகரிப் பிரதேசத்தில் கிரஞ்சி என்ற பகுதி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையினர் வான்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சிறிலங்கா வான்படையின் இந்த அகோரத் தாக்குதலால் அப்பகுதியில் இயங்கி வந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பாடசாலைச் சிறார்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்புகளை விட்டு வெளியேறி ஓடினர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்த பொதுமக்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொயவருகின்றது.

குண்டுத்தாக்குதலில் கொட்டப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு:

1. கதிர்வேலு திருநீலகண்டன் (வயது 79)
2. கிராஞ்சியைச் சேர்ந்த ஆசிரியரான சிவாநந்தி (வயது 27)
3. விஜயகுமார் விதுயா (வயது 09)
4. இந்திரன் லதா
5. தமிழரசன் சுமதி (வயது 30)
6. சசிகரன் கவிதநாயகி (வயது 34)
7. சசிகரன் காதீபன் (வயது 04)
8. சசிகரன் தமிழ்வேந்தன் (வயது 06)

ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்ள் ஆவர். இவர்களில் கவிதநாயகி, காதீபன், தமிழ்வேந்தன் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


காயமடைந்தவர்கள்

பானுசன் - அகவை (06)
தர்சன் - அகவை (08)
அருளானந்தம் - அகவை (72)
தர்மலிங்கம் பூமணி - அகவை (65)










Publicité
Publicité
Commentaires
Publicité