பூநகரிப் பகுதியில் சிறிலங்காவின் வான் தாக்குதலில்
பூநகரிப் பகுதியில் சிறிலங்காவின் வான் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.13 பேர் படுகாயமடைந்துள்ளனர். பூநகரிப் பிரதேசத்தில் கிரஞ்சி என்ற பகுதி மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையினர் வான்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.
|