இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் கடத்த முயன்ற
இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் கடத்த முயன்ற நால்வர் கியூ பிரிவு பொலிஸாரால் கைது
இலங்கைக்க்கு பிளாஸ்டிக் சாக்குகள் மற்றும் மருந்துப்பொருட்களை கடத்த முயற்சித்த நால்வரை தமிழக கியூ பிரிவு பொலிசாவு முன்தினம் கைதுசெய்தள்ளனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான மருந்துப்பொருட்கள் கைபற்றப்பட்டள்ளதுடன் அவர்களது வாகனங்களும் கைபற்றப்பட்டள்ளன. இராமநாதபுரம் அருகே சோகையன் தோப்பு கடற்கரைப்பகுதியில் கியூபிரிவு பொலிஸார் முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிஸார் விசாரித்தனர்.
அவர்களுக்கு பின்னால் வந்த மாருதி வனை பொலிஸார் சோதனையிட்டபோது அதில் மருந்துவர்கள் பயன்படுத்தும் உடைகள்,கையுறைகள், தொப்பிகள், முக அழகுக் கிரீம்கள் என்பன காணப்பட்டன. குறித்த வேனை மோதனையிட்டுக்கொண்டிருந்த போது அங்கு மற்றுமொரு மினி ரக வேன் வந்தது. பொலிஸார் சரக்கு மாருதி வேனை சோதனையிடுவதைக்கண்ட பின்னால் வந்த வேனிலிருந்தவர்கள் உடனடியாக தாம் வந்த வேனை திருப்பிக்கொண்டு வேகமாக சென்றுவிட்டனர்.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த பரமக்குடியைச் சேர்ந்த அப்துல்லா (வயது 38), இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாஜகான் (வயது 35) ஆகியோரை சுற்றி வளைத்து விசாரித்தனர்.இவர்களுடன் மாருதி வேனில் வந்த முகமது மற்றும் இபுனா ஆகியோரையும் பொலிஸார் விசாரித்தனர். அப்துல்லாவுக்கு மொபைல் போனில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்தன.
இதையடுத்து அவர்களை பொலிஸார் விசாரித்தபோது இவையனைத்தும் இலங்கைக்கு கடத்த இருந்தமை தெரியவந்தது.இதையடுத்து நால்வரையும் கைதுசெய்தபொலிஸார் அவர்கள் கடத்த முற்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர். கைதானவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.