Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
Vediyal.com
Vediyal.com
Publicité
Archives
22 février 2008

மனோ எம்.பி.க்கு பாவனைக்குதவாத வாகனம் கட்சியின்

மனோ எம்.பி.க்கு பாவனைக்குதவாத வாகனம் கட்சியின் அரசியல் குழு கண்டனம்

மனோ கணேசன் எம்பியின் பாதுகாப்புக்கு பாவனைக்குதவாத வாகனம் வழங்கப்பட்டுள்ளமையினை கட்சியின் அரசியல் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் உபதலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான வேலனை வேணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர் அதில் தெரிவித்துள்ளதாவது: மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசனுக்கு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பணிப்பின் பேரில் பாதுகாப்புக்கு எட்டுப் பொலிசாரும் ஒரு வாகனமும் (பிக்கப்) வழங்கப்பட்டது.

அதன்படி அவருக்கு வழங்கப்பட்ட வாகனம் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் எமது தலைவருக்கு உரிய பாதுகாப்புக்கு பொருத்தமான வாகனம் இல்லை. இந்த வாகனம் நீதிமன்ற ஆலோசனைக்கு மதிப்பு வழங்கும் நோக்கில் கடமைக்காக உபசாரத்துக்காக வழங்கப்பட்ட ஒரு வாகனம் என்றே எமது மேலக மக்கள் முன்னணியும் ஆதரவாளர்களும் கருதுகின்றார்கள்.

ஒரு கட்சியின் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு தொழிற் சங்கத்தலைவருக்கும் நீதியான முறையிலேயே பாதுகாப்பு வாகனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது எமது தலைவரின் பாரிய பொறுப்புக்களையும் கௌவரத்தையும் கணக்கில் எடுக்காது வழங்கப்பட்டதையிட்டு எமது கட்சியின் அரசியல் குழு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மீண்டும் நாம் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் எனும் முடிவு தவிர்க்கப்படமுடியாத தொன்றாகும்.

Publicité
Publicité
Commentaires
Publicité